புதன், 28 அக்டோபர், 2009

20 வருடத்தில் புலிகள் அழிந்துவிடும் ஆபாயம்.





தற்போது மிகப் பெரும் ஆபத்தில் உள்ள வனவிலங்குகளில் ஒன்றான புலிகள் சரியான காப்பு நடவடிக்கைகளை விரைவு படுத்தாவிடின் இன்னும் 2 தசாப்தங்களில் அழிந்துவிடும் என் எச்சரிக்கின்றனர் வனவிலங்கு வல்லுனர்கள்.
தற்போதைய கணிப்பின் படி 12 ஆசிய நாடுகளில் 3500 வரையான புலிகள் வாழ்ந்து வருவதாகவும் இது கடந்த நூற்றாண்டில் 100000 ஆகா காணபட்டதாகவும் வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வரு்டா வருடம் பல புலிகள் சட்ட விரோதமான முறையில் கொல்லப்படுவதாகவும் அவற்றின் உடல் பாகங்கள் விற்பதன் மூலம் 20 பில்லியன் அமெரிக்க டொலர் வரையான வியாபாரம் நடைபெறுவதாகவும் இன்ரப்போல் அறிக்கை இட்டுள்ளது.புலித் தோல் விலையுயர் அலங்கார ஆடையுற்பத்திக்காக பெரும்பாலும் விற்கப்படுகின்றது. குறிப்பாக ஒரு புலித் தோல் சீனா போன்ற நாடுகளில் 20000 டொலர் பெறுமதியில் விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இவற்றின் காரணமாக புலிகள் வேகமாக அழிந்து செல்வதாகவும் இதை விட ஆசியாவில் அவற்றின் இயற்கை வாழிடங்கள் அவற்றின் இரைகளுக்கான அதாவது மேச்சல் விலங்குகளுக்கான வாழிடங்கள் அழிக்கப்பட்டுச் செல்வதாலும் இது நடைபேறுகின்றதாக தெரிவித்துள்ள வனவிலங்கு பாதுகாவலர்கள் உடனடி நடவடிக்கை மூலம் புலிகள் அருகிச் செல்வதை தடுக்க பலரது ஒத்துளைப்பு தேவை எனத் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்தியா வங்காளதேசம் கம்போடியா பூட்டான் சீனா இந்தியா இந்தோனேசியா லாவோஸ் மலேசியா மியான்மார் நேபாளம் ருஸ்யா தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் புலிகள் தற்போது உள்ளன.

பூமியின் ஒவ்வொரு மூலையிலும் மனிதர்கள் குழந்தைகள் பெண்கள் என வேறுபாடு இன்றி பல வழிகளில் இறக்க காரணமாகும் சுயநலம் பிடித்தவர்கள் வாழும் இந்த பூமியில் அழகிய விலங்கு ஆனாலும் புலிகள் வாழ சுயநலம் கொண்டவர்கள் முன்வந்து வழிவிடுவார்களா?

இராட்சத கடல் வாழ் அங்கியின் சுவடுகள்


இராட்சத அங்கின் உருவமும் அதன் ஏனைய அங்கிகளுடன் ஆன ஒப்பீடும்


கடலில் வாழ்ந்ததாக கருதப்படும் இராட்சத அங்கி ஒன்றின் வன்கூடுகள் எச்சங்களாக கண்டறியக்கட்டுள்ளதாக பிரித்தானியா ஆய்வுக் கழகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்டுள்ள தாடை என்புகள்.
இதன் நீளம் மட்டும் 8 அடி அதாவது 2.4 மீற்றர் நீளம் கொண்டுள்ளதாகவும் இதன் மொத்த நீளம் ஏறத்தாள 16 மீற்றர் அதாவது 54 அடியாக இருக்கலாம் எனவும் அவ் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது முதளை உருவாகதாக இருக்கலாம் என்றும் ஒரு நேர உணவுக்கே டைனோசர்களில் ஒன்றான Tyrannosaurus rex இனை உண்ணும் அளவில் அவற்றின் உணவு உண்ணும் வினைத்திறன் காணப்பட்டிருக்கும் என்னும் ஆரம்பக் கட்ட ஆய்வின் பின்னர் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நான்கு வருட தொடர் ஆராய்ச்சியின் பின்னர் இதை கண்டறிந்துள்ள தொல் பொருள் மற்றும் சுவட்டு ஆய்வாளர் இது பிரித்தானியாவின் தெற்கு கடற்கரையில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் என்றும் பிலியோசரஸ் எனப்படும் வகுப்பினுள் உள்ளடக்கப்படும் அங்கியின் சுவடு என்றும் தெரிவித்துள்ளார்.
7 தொடக்கம் 12 தொன்வரையான நிறைகொண்டிருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ள இவ் சுவட்டு ஆதாரமே இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளதில் மிகப் பெரிது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் இவ் சுவட்டு ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள பிரித்தானியாவின் கடல் பிரதேசத்தில் மேலும் இவ்வகையான சுவட்டு ஆதாரங்கள் ஏதாவது கிடைக்கின்றனவா எனத் தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.நான்கு அவயவங்கள் கொண்டுள்ளதாகவும் வேகமாக நீந்தும் தன்மை கொண்டதாகவுமு் இவ் அங்கி இருந்துள்ளது என்றும் ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில் வருடங்களுக்கு முன்னர் நோர்வேயில் கண்டெடுக்கப்பட்ட இரை கெளவ்வி ஒன்றின் வன்கூடும் 2002இல் மெக்சிக்கொவில் கண்டெடுக்கப்பட்ட அராம்பெரி இராட்சத அங்கியின் வன்கூடும் ஒரே அளவுடையதாக கருதப்படுகின்றது.


கணிணி வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள அங்கியின் உருவம்
பூமியில் மனிதன் இன்று ஆட்சியாக இருந்தாலும் வெவ்வேறு சூழல் தொகுதிகளில் வெவ்வேறு மிருகங்கள் முன்னைய காலத்தில் ஆட்சியாக வாழ்ந்து அழிந்துள்ளன என்பதற்கு மீண்டும் ஒரு பலமான ஆதாரம் கிடைத்துள்ளமை இட்டு ஆராச்சி உலகு மீ்ண்டும் ஒருமுறை சந்தேசப்பட்டுள்ளது.

நன்றி பிபிசி மற்றும் ரைம்ஸ்

திங்கள், 26 அக்டோபர், 2009

ஆப்பிரிக்க யானை இனம் 15 ஆண்டுகளுக்குள் அழியும் அபாயம்


ஆப்பிரிக்க யானை இனம், இன்னும் 15 ஆண்டுகளில் முழுமையாக அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பன்னாட்டு விலங்குகள் நல அமைப்பு எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள வனப் பகுதிகளில் ஏராளமான அரிய வகை விலங்குகள் வசிக்கின்றன.
இவற்றில், ஆப்பிரிக்க யானைகள் மிகவும் பலம் பொருந்தியவை. அகன்ற காதுகள், மிக நீளமான தும்பிகைகளுடன் இவை தோற்றமளிக்கும்.
தற்போது அதன் தந்தங்களே அந்த யானை இனத்தின் அழிவுக்குக் காரணமாக அமைந்து விட்டது. ஆப்பிரிக்க யானைகளின் விலை மதிப்பற்ற தந்தங்களுக்காக அவற்றை பல சட்டவிரோத கும்பல்கள் வேட்டையாடி வருகின்றன.

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சட்ட விரோதமான சில பகுதிகளில் ஆபிரிக்க யானைத் தந்தங்கள், அதிக விலைக்காக பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அவற்றை வேட்டையாடும் போக்கு அதிகரித்து வருகிறது. இது குறித்து பன்னாட்டு விலங்கு கள் நல நிதியம் தெரிவித்துள்ளதாவது,
சர்வதேச அளவில் போதைமருந்து, ஆயுத கடத்தல் ஆகிய சட்ட விரோத வியாபாரம் தான் மிக அதிக விலை மதிப்பிற்கு நடக்கிறது.
இவற்றுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது யானைத் தந்தம் வியாபாரம், ஒரு ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி ரூபா அளவுக்கு இந்த வியாபாரம் சர்வதேச அளவில் கொடிகட்டி பறக்கிறது. தினமும் 104 யானைகள் தந்தங்களுக்காக வேட்டை யாடப்படுகின்றன.
இந்த போக்கு தொடர்ந்தால் இன்னும் 15 ஆண்டுகளில் ஆப்பிரிக்க யானை இனமே முழுவதுமாக இல்லாமல் அழிந்து விடும்

நன்றி விக்கி நியூஸ்

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

விவசாயத்தில் நனோ தொழில் நுட்பம்.



விவசாயத்திலும் நனோ தொழில் நுட்டபத்தினை புகுத்திவிட முயன்றுவரும் ஆராய்ச்சியாளர்கள் தற்போது அதன் முதல் மைல் கல்லை எட்டியுள்ளார்கள்.
தக்காளியை தமது பரிசோதனைக்கு உட்படுத்தி அதில் ஒரு வெற்றியை பெற்றுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
தக்காளி விதைகளை காபன் நுண் குழாய்களுடன் இணைத்து நன்கு கலந்து ஊறவைத்து விதைத்தபோது அவர்கள் பெற்ற அவதானங்கள் வரும் காலத்தில் நனோதொழில் நுட்பம் கொண்ட விவசாய பிரயோகத்தில் ஏற்படப்போகும் சாத்தியங்கள் புரட்சிகள் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தலைமுடியில் தடிப்பில் 1/50000 என்னும் தடிப்பு கொண்ட காபன் நுண்குழாய்கள் கலந்து விதைக்கப்பட்ட தக்காளி வித்துக்கள் சாதாரண வித்துக்களை விட வேகமாக முளை விட்டு வேகமாக வளர்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
ஆர்கானாஸ் பல்கலைக்ழககத்தின் விஞ்ஞானிகள் தக்காளி விதைகளை காபன் துண் குழாய்கள் carbon nanotubes உடன் சேர்ந்து சிறிதளவு மன் மற்றும் பாறை துகள்கள் உட் சேர்த்து விதைத்து பரீட்சித்தபோது அது விதையின் உயிரியல் ரீதியான செயற்பாடுகளில் தாக்கங்களை ஏற்படுத்துவதை அவதானித்துள்ளனர்.
இதில் முளைக்கும் போதான தாவர வித்துக்கள் அகத்துறிஞ்சும் நீரின் அளவை அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர்.
சாதாரணமாக 38.9 சதவீதமான நீரை வித்துக்கள் முளைக்கும் பொது அகத் துறிஞ்சுவதாகவும் ஆனால் காபன் சிறு குழாய்கள் கலந்து முளைக்கவிடப்பட்ட குழாய்கள் 57.6 வீத நீதை அகத்துறிஞ்சுவதாக தெரிவித்துள்ளனர்.



இதன் தொடர்ச்சியான விதைகள் சாதாரண நிலையைவிட இரு மடங்கு வேகமாக முளைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது வரை அவ் நுண் குழாய்கள் நீர் உள்ளீட்டை அதிகரிப்பதில் செலுத்தும் சரியான தாக்கம் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்வதில் விஞ்ஞானிகள் சிரமத்தை எதிர்நோக்கி வந்தாலும் இவ் விஞ்ஞான அடைவு வெகுவிரைவில் விவசாயத்தில் பெரும் புட்சியை உருவாக்கலாம் எனதெரிவித்துள்ளனர்.


நன்றி போக்ஸ் நியூஸ்

சனி, 24 அக்டோபர், 2009

மலாவியில் மனித தோற்றம் இடம் பெற்றுள்ளதா?




தென்மேற்கு ஆபிரிக்க நாடான மலாவியில் மனித இனம் தோற்றம் பெற்றிருக்காலம் என்னும் சந்தேகங்கள் எழுப்பக்கூடிய சில சுவட்டு ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.




அங்கு அண்மையில் அகழ்வாராட்சிக்கு உட்படத்தப்பட்ட பகுதி ஒன்றில் இருந்து புராதன ஆயுதங்கள் மற்றும் எச்சங்கள் ஆதாரமாகக் கொண்டு இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.மலாவியில் வட நகரான கரோங்காவின் பின்தங்கிய இடம் ஒன்றில் இவ் மானிடவியல் அகழ்வு இடம் பெற்றுள்ளதாகவும்.இவ் கண்டற்கை தற்போது உள்ள ஆபிரிக்காவின் பெரிய "றிவ்ற்" பள்ளத்தாக்கு மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகள் மனித இனம் தோன்றியதற்கான இடம் என்னும் கொள்கையை வலுப்படுத்துவதாகவும் அத்துடன் இவ் பரப்பில் மலாவியை இனி இணைக்க வேண்டிய நிலையையும் ஏற்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இவ் பகுதியில் டைனோசர்கள் போன்ற 100 தொடக்கம் 140 மில்லியன் ஆண்டுகள் வரை வாழ்ந்த அங்கிகளின் எச்சங்களை கொண்டு இருந்துள்ளதாகவும் அதேபோல் 6 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட மனித மற்றும் மரவாழ் மூதாதைகளையும் கொண்டிருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே தன்சானியாவில் மனித முதாதைகள் தோன்றியுள்ளது என்னும் கருத்தும் அதற்கான ஆதாரங்களும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுக் கொண்டுள்ள நிலையில் தன்சானியா எல்லையில் உள்ள இவ் மலாவியில் அதேவகையிலான அகழ்வின் மூலம் மனித மூதாதை எச்சங்கள் வாழிட சுவடுகள் கண்டிறியப்பட்டுள்ளதை மனித இனம் தோன்றியது பற்றிய பல வினாக்களுக்கு விடைதரும் என எதிர்பார்க்கப்படுகின்றது


நன்றி றொய்ரர்ஸ்

வெள்ளி, 23 அக்டோபர், 2009

பட்டினிச்சாவின் விளிம்பில் 6 மில்லியன் எதியோப்பியர்




எதியோப்பியாவில் 6 மி்ல்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கி இருப்பதாகவும் தமக்கு உடனடியான உணவு தேவையை பூர்த்தி செய்யும் படியும் ஏதியோப்பியா கோரியுள்ளது.கடந்த காலங்களில் அங்கு நிலவிய பொதுவுடைமை கொள்கைகள் காரணமாக முதலாளித்துவ நாடுகளால் ஒதுக்கப்பட்டு இருந்த எதியோப்பியாவில் தற்போது வரைக்கு மில்லியன் மக்கள் பட்டிணியால் இறந்துள்தை சுட்டிக்காட்டியுள்ளது அத்துடள் அந் நாடு பாரிய தொண்டு நிறுவனற்களின் உடனடியான நிவாரணப் பணியையும் கோரியுள்ளது.
தற்போது ஆபிரிக்காவின் சில நாடுகளில் நிலவி வருகின்ற மிகப் பெரும் வறட்சியும் இதற்கு காரணமாகியுள்ளதை தொடர்ந்து அங்கு மிக்ப் பெரும் பட்டினிச் சாவு நிலைமை தோன்றியுள்ளது.ஏற்கனவே கென்யா மற்றும் சூடான் என்பன கடும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளன.தொடரும் வறட்சி காரணமாக 60 வீதமான மக்கள் தமது வாழிடங்களில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் பல விளை நிலங்கள் கைவிடப்பட்டு மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றது.தற்போதைய நிலையில் 8.5 மில்லியன் எதியோப்பியர்களில் 4.5 மில்லியன் எரியோப்பியர்களுக்கு உடனடியாக உணவு உதவி தேவை என்றும் உதவியாக தமக்கு 121 மி்ல்லியன் அமெரிக்க டொலர் தேவை என்றும் எதியோப்பிய விவசாய அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.கடந்த பலகாலமாக சக்கரச் செயற்பாடாக நிகழும் வறட்சி காரணமாக எதியோப்பியா தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் 1984 இல் நிகழ்ந்த பாரிய வறட்சி காரணமான தாக்கங்கள் உலக கவனத்தை ஈர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.தற்போதும் அதே நிலைமையை ஒத்த நிலைமை உருவாகி வருகின்றதாக தொண்டு பணியாளர்கள் தெரிவித்துள்ளார்கள் அத்துடன் தற்போது ள்ள உணவு விலையும் அங்குள்ள மக்களை மேலும் பட்டினி இட்டுச் செல்கின்றதாகவும் தெரிவித்துள்ள தொண்டு நிறுவனங்கள் எதியோப்பிய அரசின் கணிப்பை விட அங்கு பட்டிணியை எதிர்நோக்கியுள்ள மக்கள் தொகை அதிகமாக இருக்க கூடும் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளது.இவ் பட்டினி நிலைமை போசாக்கு இன்மை காணைமாக சிறியவர்கள் பெரியவர்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக அவர்களின் அவயவங்கள் மெலிந்து ஒட்டிய நிலையில் இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படகிறன்றது.

குறிப்பு: இயற்கையால் விளைந்த வினை இது ஆனால் செயற்கையாகவும் இவ்வாறான நிலைமைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டுள்ளன.இது நமது கண்ணின் முன்னே நடைபெற்றுக் கொண்டுள்ளது. சில விடயங்கள் மறைக்கப்பட்டு அதை அறியும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

எனவே இது போலவே உள்ள பல உலக சமூகங்கள் உதவிக்கு ஏங்கி நிற்கின்றன என்பதை புரியவேண்டும் உரியவர்கள் .உங்களில் நாங்கள் என சொல்லித் திரிபவர்கள்.

திங்கள், 19 அக்டோபர், 2009

சூரியக்குடும்பத்துக்கு வெளியே 32 புதிய கோள்கள் கண்டறியப்பட்டன


புவியும் மற்றய பல கோள்களும் அடங்கியுள்ள எமது சூரியக்குடும்பத்துக்குவெளியே சுற்றொழுக்கில் சுற்றி வருகின்ற புதிய கோள்கள் 32 இனை ஐரேப்பிய வானியலாளர்கள் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.ஐரோப்பிய தென் கண்காணிப்பு தொலைநோக்கியின் ஊடாக அவதானித்தததில் இவ் கோள்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவற்றில் எவையும் புவியின் அளவிலோ அல்லது உயிர் வாழக்கூடிய நிலையிலோ இருப்பதற்கான சான்றுகளை தொலைக்காட்டி காட்டவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இவ் புதிய கோள்கள் அவதானிக்கப்பட்டதுடன் சூரிய மண்டலத்துக்கு வெளியே மொத்தமாக 400 மேற்பட்ட கோள்கள் அவதானித்துள்ளதாக ஐரோப்பிய வானிலை ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இவற்றில் 6 கோள்கள் புவியை விட பெரியனவாகும் அவை சுப்பர் ஏர்த் அதாவது மிகை பூமிகள் என அழைக்கப்படுகின்றன.ஏனையவற்றில் பெரும்பாலானவை பூமியை விட சிறியனவாக உள்ளதாகவும் சில வியாழன் போன்று மிகப் பெரிதாக உள்ளதாயும் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இவ் கோள்களின் கண்டறிகையானது கோள்கள் தோன்றியுள்ளதாக கருதப்படும் கொள்கையை பலப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் புவிபோன்ற பலகோள்கள் அண்டத்தில் பரந்திருப்பதை தம்மை நம்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் இயற்கை வெறும் வெற்றிடம் இல்லை அங்கு அண்டம் இருந்தால் அங்கு கோள்கள் பரந்து கிடக்கின்றன எனவும் தெரிவித்துள்ளனர்.
இவ் 32கோள்கள் கண்டறியப்பட்டது ஒரு சாதனை என்றும் கோள்கள் கண்டறிவதில் ஐரோப்பிய வானவியலாளர்கள் முன்னோடிகள் என்பதை நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள ஐரோப்பிய வானவியலாளர்கள் தாம் உயர் துல்லியம் மிக்க ஆரைவேகக் கோள்கள் தேடும் பொறிமுறை கொண்ட சில்லியில் அமைந்துள்ள தொலைநோக்கியால் இவ் கண்காணிப்பை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த கண்டறிவைச் செய்தது கார்ப HARPS எனப்படும் தொலை நோக்கி எனவும் இது இதுவரை 75 வரையான வேறு சூரிய மண்டலக் கோள்களை கண்டறிந்துள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

நன்றி
http://www.eso.org/

சனி, 17 அக்டோபர், 2009

கடலுக்கடியில் நாடாளுமன்றக் கூட்டம்




கடந்த 16 .09.2009 அன்று உலகில் ஒரு வினோதத்தை நிகழ்த்தி காட்டியுள்ளனர் மாலைதீவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அது பலருக்கு வினோதமாக பட்டாலும் மாலைதீவாரை பொறுத்தவரையில் அது ஒரு வாழ்வாதார மனிதாபிமான பிரச்சினை.
மாலைதீவின் சிறிய நாடாளுமன்றின் பிரதிநிதிகள் ஒன்று கூடி ஒரு சூழல் சம்பந்தப்பட்ட ஓப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளனர். அனால் அவர்கள் அதற்கு தெரிவு செய்துள்ள இடம்தான் பலரை மலைக்க வைத்துள்ளனது.
மாலை தீவுகளில் உள்ள படைத்துறைப்பளிகளில் ஒன்றான கிறிபியூசி என்னும் களப்பில் நீருக்கு அடியில் 20 அடி அதாவது 6 மீற்ரர் ஆழத்தில் இவ் கூட்டம் நடைபெற்றுள்ளது.
அது மட்டுமல்லாமல் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இவ் கூட்ம் நடைபெற்றது இங்கு குறிப்படத்தக்கது தீவிரவாதிகளுக்கோ அல்ல பிற ஊடுருவல் காரருக்கோ பயந்து அல்ல மீன்களுக்கு பயந்து.

மாலைதீவின் ஜநாதிபதி மற்றும் அமைச்சர்கள் 13 பேர் இணைந்து தமது நாட்டை பாதுகாக்குபடியும் அதற்கு புவி வெப்பமாவதற்கு காரணமான பச்சையில்ல வாயுக்களை வெளியிடுவதை குறைக்க நாடுகள் முன்னவரவேண்டும் எனக் கோரும் ஒப்பந்தத்தில் இவ்வாறு நீருக்கடியில் அவர்கள் கூடி கையொப்பம் இட்டுள்ளனர்.
1192 சிறிய தீவுகளை கொண்ட 350000 மக்கள் தொகை கொண்ட இந்து சமுத்திரத்தின் அழகிய தீவு நாடு மாலைதீவு
தற்போது அதிகரித்துவரும் புவி வெப்பமாதல் மற்றும் அதன் தொடர்ச்ச்சியான கடல் மட்டம் உயர்வால் முதலில்
பாதிக்கப்படபோவது அதாவது மூழ்கப்போவது இதுவே.
இதனை அடிப்படையாக கொண்டு மாலைதீவின் வரலாற்றில் முதன் முறையாக நிறுவப்பட்டுள்ள ஜனநாயக அரசு பலவிதமான நடவடிக்கைகளை தேற்கொண்டு வருகின்றது.
வரும் மார்கழியில் கோப்பன்காகனில் நடைபெறவுள்ள காலநிலை மாநாட்டில் முன்வைக்கவென்று இவ்கோரிக்கையை அவர்கள் தயார் செய்துள்ளர்.

வெள்ளி, 16 அக்டோபர், 2009

உயிரி எரிபொருளாலும் ஆப்பா. என்ன செய்யும் உலகு.


தற்போது ஏற்பட்டுள்ள புவியின் காலநிலை மற்றும் மாசுப்பிரச்சினைக்கு முக்கிய காரணம் சுவட்டு எரிபொருள் பாவனை என்றும் அதற்கு மாற்று வழி தெரிவு செய்யப்படின் காபனீரொட்சைட்டை வெளியிடுவது குறைந்து புவியின் மாசாக்க வீதம் குறைவதால் காலநிலைப்பிரச்சினை இல்லாமல் போய் விடும் இல்லை குறையும் என முன்னர் கூறி வந்த கருத்துக்கே விஞ்ஞானிகள் தற்போது மறு கருத்து வெளியிட்டு வருகின்றனர்.தற்போதைய நிலையில் இவ் உயிரி எரிபோருட்களே காபனீரொட்சைட் வெளியீட்டுக்கு காரணமாகிவிட்டது என்னும் திடுக்கிடும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அதில் இருந்து அவதானமாக இருக்கும் படி கோரிக்கையும் விடுத்துள்ளனர்.பல விதாமன ஆராய்ச்சிகளை பல நாடுகளில் நடாத்தியதன் பின்னர் அதாவது இவ் உயிர் எரிபொருட் பாவனையால் காலநிலை சூழல் நிலம் நீர் விவசாயம் ஆகியவற்றில் ஏற்படும் தாக்கம் என்ன என்று ஆராயந்த விடத்தில் அது பயனுள்ளதாக இருந்தாலும் பெருமளவு காபனீரொட்சைட்டை வெளியிடுவதை தடுத்தாலும் வேறுபல பிரச்சினைக்கு காரணமாகி விடுகின்றது கண்டறியப்பட்ள்ளது.குறிப்பாக காடழித்து அந்த நிலத்தில் பயிர்களை வழர்த்து அதன் மூலம் பெறப்படும் உயிரி எரிபொருட்கள் பூமிக்கு தாக்கம் விழைவிக்கின்றதாக தெரிவிக்கின்றனர்.அதாவது பெருமளவு காட்டு பரப்புகள் அழிக்கப்படுவதால் நிலத்தில் இருந்தான காபன் சக்கரம் தடைப்டுவதுடன் காட்டு தாவரங்கள் அளவில் இவ் உயிரி எரிபொருளுக்கான தாவரங்கள் காபனீரொட்சைட்டை பதிக்காது போவதால் இது ஏற்படுகின்றது.தற்போதைய தரவுகளின்படி சுவட்டு எரிபொருள் பாவனையால் வெளிவிடப்படும் காபன் அளவை விட இவ் காடழித்தல் மூலம் தேங்கும் காபன் 2000 மடங்கால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதாவது உயிரி எரிபொருட்களை பாவிக்கும் போது அவை சாதாரண சுவட்டு எரிபொருட்களை விட 80 வீதத்தால் காபன் வெளியீட்டை குறைக்கின்றன ஆனால் அவை காடழித்து பயிர் செய்யப்பட்டு பெறப்பட்டால் காபன் வெளியீட்டை 800 வீதத்தால் கூட்டுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது மட்டுமல்லாமல் பூமியில் தற்போதைய போக்குவரத்து தேவையின் 10 வீதம் உயிரி எரிபொருளால் நிரப்ப பனய்தரு நிலத்தில் 41 சதவீதம் தேவைப்படுகின்றது இதனால் பெருமளவு விழை நிலங்கள் விழுங்கப்படலாம் என்பதும் பிறிதொரு கருத்துஎனவே பூமியைக் காக்க திட்டங்கள் வேறு வகையில் அமுல் படுத்தினாலும் அது பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக உள்ளது.ஆனால் இதற்கும் மாற்றுவழி தேடும் வல்லமை மரபணுப் பொறியலாளர்களின் கையில் உள்ளது. என்பது உண்மை.அதாவது பாழ்பட்டுப்போய் உள்ள நிலங்களில் விழையக்கூடிய பயிர்களை தேடி மரபணுப் பொறயியலில் உருவாக்கினால் எல்லாம் சரிவரும் பார்ப்போம் எத்தனையூ பண்ணி விட்டார்கள் இதையும் பண்ணுவார்கள் விஞ்ஞானிகள் என எதிர்பார்த்து

வியாழன், 15 அக்டோபர், 2009

10 வீத தாவரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ள தாவரவியல் பூங்கா



கியூ தாவரவியல் பூங்கா

பிரித்தானியாவின் தாவரவியலாளாளர்களால் பிரித்தானியாவின் கியூ தாவரவியல் பூங்கா மூலம் புதிய சாதனை ஒன்று நிலைநாட்டப்பட்டுள்ளது. பூமியில் உள்ள தற்போது வாழ்ந்து வருகின்ற ஆபாயத்தில் உள்ள தாவரங்களில் விதைகள் சேகரிக்கப்பட்டு அவை அழிந்து விடாது பாதுகாக்கும் திட்டம் ஒன்றின் மூலம் 10 வீத புவி வாழ் தாவரங்கள் பாதுகாக்கப்பட்ள்ளது .54 நாடுகளில் இயங்கும்
பிரித்தானிய றோயல் தாவரவியல் பூங்காக்கள் என்னும் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் கிளைகள் மூலம் இதை செய்துள்ளனர் தாவரவியலாளர்கள்.

பாதுகாக்கப்படும் தாவரம் ஒன்று

முக்கியமாக அழிவின் அபாயத்தில் உள்ள தாவரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டுள்ளன இன்னும் சேகரிக்கப்பட்டுக் கொண்டுள்ளன.இத் திட்டம் மூலம் 2020 இவ் புவியில் வாழும் தாவர இனங்களில் 25 வீதமானவற்றை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் 60000 தொடக்கம் 100000 வரையான தாவரங்கள் அழிவின் அபாயத்தி்ல் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது முக்கியமாக மனித செயற்பாடுகள் மூலம் இது நடந்தேறி வருகின்றது.கடந்த 2000 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 3.5 பில்லியன் விதைகள் செகரிக்கப்பட்டு அந்தந்த நாடுகளிலும் மற்றும் பிரித்தானியாவின் ஆடிங்லி என்னும் இடத்திலும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நீங்களும் வேண்டுமானால் உங்கள் இடத்தில் உள்ள அருகி வரும் ஆபாயத்தில் உள்ள இனங்களை பாதுகாக்கும் பணியில் இணையாலாம்.
http://www.kew.org/

மிகக்குறைந்த விலையில்




Compaq? Hewlett-Packard acquired the venerable computer company way back in 2002, but it's kept the name alive as a secondary brand ever since, mainly relegating Compaq to overseas markets (Compaq is particularly popular in Asia) and as second-tier PCs sold on the cheap at warehouse-style stores.
But now HP is looking to breathe a little new life into the Compaq brand, positioning it not just as a label for extremely cheap computer equipment but also as one with mainstream appeal in the U.S.
Today the company is announcing the rollout of a line of ultra-inexpensive PCs, both laptops and desktops, with extreme budgets in mind.
Consider first the Compaq CQ61z (pictured), a 15.6-inch laptop with an AMD Sempron CPU, 2GB of RAM, DVD burner, 160GB hard drive, and discrete graphics. Running Windows 7 Home Premium, the machine costs a nearly unfathomable $399. That price point probably sounds familiar -- it's the usual cost for your average netbook, which in comparison offers a tiny screen, minimal hard drive, and an ultra-low-power Atom CPU.
With the $400 laptop's arrival, Compaq wants potential buyers to ask: Why not jump up to a much larger and more capable system for exactly the same price? I'm having a hard time seeing any reason not to. Seriously, it even has a numeric keypad.
Even better bargains abound for desktop shoppers. The attractive Compaq Presario 4010f has similar specs (with a 250GB hard drive) and starts at just $309 after a $100 rebate.
Both systems are available on Windows 7 launch day, October 22.
Compaq's aggressively inexpensive hardware -- particularly the $399 laptop -- could have massive ramifications for the computer market. Will netbooks finally feel the pinch that they've been giving to standard laptops for two years now? And what kind of pressure will machines like this bring to bear on more expensive notebook PCs? Price war in 3... 2... 1...

புதன், 14 அக்டோபர், 2009

அழிவின் விளிம்பில் அபூர்வமான இந்தியத் தாமரை


Wikinews தளத்திலிருந்து



உலகெங்கும் இல்லாத வகையில், இந்தியாவில் மட்டுமே இருக்கும் ஒரு வகை அபூர்வமான தாமரை மலர்ச் செடி அழிவை நோக்கிச் செல்கிறது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயா மாநிலத்தின் தலைநகரான ஷில்லாங்குக்கு 15 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்மிட் எனும் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் ஒரு குட்டையிலேயே இந்த அரிய வகை தாமரை மலர்ச் செடிகள் உள்ளன. அதுவும் தற்போது 15-20 செடிகளே உள்ளன.

இவற்றைப் பெருக்குவதிலும் பார்க்கப் பாதுகாப்பது இப்போது மிகவும் முக்கியமானதாகத் தெரிகிறது.

பேராசிரியர் பிரமோத் டாண்டன்
பொதுவாக லில்லி செடியை ஒத்த இந்த வகை தாமரை மலரின் செடியை பாதுகாத்து அதைப் பெருக்கும் நடவடிக்கைகள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்று பிரபல தாவரவியல் வல்லுநரும், ஷில்லாங்கில் இருக்கும் வடகிழக்கு மலைப்பகுதி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான பேராசிரியர் பிரமோத் டாண்டன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அரிய தாவரங்கள் மற்றும் மலர்ச் செடிகள் அழிந்து வருவது உலகளாவிய ஒரு பிரச்சினை என்றும், அதை எதிர்கொள்ள உலகளவில் ஒரு செயற்திட்டம் தேவை என்றும் பேராசிரியர் டாண்டன் கூறுகிறார். உலகளவில் தகுதியும் திறமை வாய்ந்தவர்களும் ஒருங்கினைந்து செயற்படவேண்டியது மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
"நிம்ஃபியா டெட்ரோகொனா" (Nymphaea tetragona) எனும் அந்த அரிய வகை தாமரைச் செடியை பாதுகாக்க இந்திய அரசு ஓரளவு நிதி ஒதுக்கீட்டை செய்திருந்தாலும் அது போதுமானதாக இல்லை என்றும் அவர் கருத்து வெளியிடுகிறார்.
மூலம் Wiki News

செவ்வாய், 13 அக்டோபர், 2009

மீண்டும் பறக்கும் தட்டா மொஸ்கோவில் அதிசயம்.


மொஸ்கோவின் வான் பரப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காண அரிய காட்சி ஒன்று தென்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அதன் இரகசியம் புலப்பட்டதாக தெரியவில்லை.மேல் உள்ள புகைப்படத்தை பார்த்தால் அது என்னவென்று ஓரளவுக்கு புரிந்து கொள்ளலாம்.இது முகிலா இல்லை வேறு பொருளா என்பதில் இன்றும் மர்மம் நீடிக்கின்றது.முதலில் இரு கணிணி வடிவமைப்பு என்று நம்பிய ரஷ்ய வாநிலை நிலையம் தற்போது இல்லை இது அவ்வாறான கணினி கிராப்பிக்சால் உருவாக்கப்படவில்லை என ஏற்றுக் கொண்டுள்ளது.ஆனால் அது என்ன என்பது இன்னும் பலப்படவில்லை என்றே தெரிவித்து வருகின்றது. வானத்தில் அவ்வாறு வளையமாக தோன்றியது அடையாளப்படுத்தப்படாத வெளியுலக பொருளா அல்லது முகிலா என்னும் சந்தேகங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.உலகின் மர்மங்கள் பல இன்னும் புலப்படாமல் உள்ள நிலையில் குறிப்பாக சோவியத் ரஷ்யாவின் மர்மங்கள் இன்னும் பலப்படாமல் உள்ள நிலையில் இன்னும் ஒரு மர்மம். ஏதொ வெளியுலகப் பொருள் எனில் இன்னும் புதினங்கள் வரும் வரும் போது தரக் காத்திருக்கின்றேன்.

சலனப் படத்தை பார்க்க சொடுகவும்.



சிறுத்தைகளின் அதிரடி





இலக்கு பார்க்கும் சிறுத்தை


தாக்குதலுக்கு தயாராகின்றனர் அண்ணன் தம்பிகள்





சிறுத்தைகள் உலகின் ஓட்ட வீரர்கள்.
அவர்களோடு போட்டி போட இன்னும் யாரும் இல்லை என்று தெரியும் நமக்கு.அத்துடன் அவர்கள் வீரர்களும் கூட. நாட்டு சிறுத்தைகளை இங்கு நான் கூறவில்லை அது நான் கூறித்தான் தெரியவேண்டும் என்னும் இல்லை காட்டு சிறுத்தைகளை கூறுகின்றேன்.இவர்கள் பயங்கரமான எதிரிகள் காட்டு வாழ் மிருகங்களுக்கு.
இந்த வகையில் தற்போது பிரித்தானியாவின் தொலைக்காட்சி குழு ஒன்று அண்மையில் காண அரிய காட்சி ஒன்றை படம் பிடித்துள்ளது.


மும்முரமான வேட்டையில்


அத்துடன் பலருக்கு இருந்தவந்த ஒருவகை சந்தேகத்தையும் தீர்த்துள்ளது.
பொருவாக சீத்தா புலியா அல்லது தீக்கோழியா ஓட்ட வீரர் என்றும் பலசாலிகள் என்னும் கோள்விக்கு பலர் பலமுறை விழித்தே பதில் தருவார் ஆனால் சிறுத்தை செய்து காட்டியுள்ளது நான்தான் ஓடவிட்டால் வெல்வேன் என்று எனக்கும் பலம் உள்ளது என்றும்.
அதாவது பயங்கரமான சிறுதாக்கள் மூன்று தீக்கோழி ஒன்றை கலைத்து வேட்டையாடும் படங்களை சேகரித்துள்ளது குறிப்பிட்ட தொலைக்காட்சி குழு.
கென்யாவின் லீவா சரணாலயத்தில் இதை படம்மாக்கியுள்ளனர் அவர்கள்.அத்துடன் பொதுவாக தனியே வேட்டையாடும் சிறுத்தைகளுக்கு மத்தியில் இவை மூன்று பேர் இணைந்து வேட்டையாடும் புதிய யுக்தியையும் கற்றுக் கொண்டுள்ளதை காணமுடிவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் பொதுவாக சீத்தாக்கள் தம்மை விட சிறிய அங்கிளை வேட்டையாடும் தன்மை வாய்ந்தவை ஆனால் இவை எருதுகள் மற்றும் தம்மை விட மிகவும் பலம் வாய்ந்த தீக்கோழிகளை வேட்டையாடுவது பெரும் அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் மிருகங்களின் நடத்தையியல் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர்.


கூர்ப்பின் விழைவா இல்லை அவை பழகிய சூழலின் தன்மையா இவற்றின் இவ் மாற்றத்துக்கு காரணம் என்று ஆராய தலைப்பட்டுள்ளது விஞ்ஞான உலகு.
அது மட்டு மல்ல உலகில் இரு போன்ற மாற்றங்கள் நிறைய வரவேண்டும் குறிப்பாக மனிதனிடத்தில் வரவேண்டும் அடிமைப்படுத்த நினைப்பவர்களுக்கு அவர்களை வேட்டையாடி கற்றுத் தரவேண்டும் நாம் யாரென்று.

திங்கள், 12 அக்டோபர், 2009

நோபல் பரிசு எண்ணிக்கை கூடுமா?கோரிக்கை விடுக்கின்றனர் விஞ்ஞானிகள்.


பொதுமக்கள் சுகாதாரத்துக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் காச நோயாளர் ஒருவருடன்

தற்போது உலகின் கல்விசார் அறிஞ்ஞர்கள் ஏன் அனைவரையும் பெரும்பாலும் பேச வைத்துக் கொண்டுள்ள ஒரு விடயம் நோபல் பரிசுகள் பற்றியும் அதற்காக தேர்வு செய்யப்பட்ட வெற்றியாளர்கள் பற்றியுமாகும்.1901 ஆம் ஆண்டு நோபலினால் அறிமுகப்படுத்தப்பட்ட இப் பரிசு 21 ஆம் நூற்றாண்டின் பல விஞ்ஞானிகளை சமூக சேவையாளர்களை மருத்துவர்களை பெறியலாளர்களை பெருளியலாளர்களை கெளரவித்து வருகின்றது.இதன் மூலம் ஏனைய பலரை ஊக்கப்படுத்தி புதிய பல விடயங்கள் உருவாகவும் புதிய சிந்தனைகளுக்கும் வழி வகுக்கின்றது.





தற்போது மருத்துவம். இரசாயணம். பெளதீகம்.இலக்கியம்.சமாதானம் ஆகிய விடயங்களுக்கு பரிசுத் தேர்வுகள் இடம்பெறுகின்றன.


இத் தேர்வு எண்ணிக்கையை கூட்டும் படி சில் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் கூட்டாக நோபல் பரிசுத் தேர்வுக்குழுவுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர்.
குறிப்பாக முன்னர் பல சாதனைகள் செய்து உதவி மறக்கப்பட்டுள்ள விஞ்ஞானிகளை மையப்படுத்தியே இந்த கோரிக்கையை அவர்கள் விடுத்துள்ளனர்.
அதாவது இதுவரை பசிக்கு பரிந்து உரைக்கப்படாத அல்லது பரிசு இல்லா காலத்தில் அறிவியலில் பங்களிப்பு செய்த விஞ்ஞானிகள் இதன் மூலம் கெளாவிக்கப்படவேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்





இதில் அவர்கள் சமாதானத்துக்கான பரிசு அடிப்படையில் சுற்று சூழல் மற்றும் சமூக சுகாதாரம் ஆகிய விடய்ஙகளுக்கான பரிசு ஒன்றை அறிமுகப்படுத்தும் படியும். மருத்துவம் மற்றும் உளவியல் அடிப்படையில் உயிரியல் மற்றும் பல்வகைமை பிறப்புரிமையியல் கூர்பு உயிரியல் மூலக்கூற்றியல் அடங்கிய விடயங்களினை உள்ளடக்கி பரிசுகள் அறிமுகப்படுத்தும் படி கோரியுள்ளனர்.


அவர்கள் நோபல் தோர்வுக்குழுவுக்கு எழுதியுள்ள கடிதம் கீழ் தரப்பட்டுள்ளது.





நன்றி ரைம்ஸ்








Michael Sohlman
Executive Director, Nobel Foundation
Sturegatan 14
Box 5232
SE-102 45 Stockholm
Sweden.

30 September 2009

Dear Mr Sohlman,

We are a group of ten scientists and engineers. During the past month, at the request of
New Scientist magazine, members of the group have discussed how we would like to see
the science prizes administered by the Nobel Foundation evolve. We would like to
present the results of our discussion, in the hope that our conclusions will stimulate
debate amongst members of the foundation.
The prizes are an extraordinary institution. They have been used to recognise many of the
most notable scientific achievements of the past century. We feel that no other science
prize does more to reward and promote brilliance, or attracts more attention from the
public.
The prizes will no doubt continue to be influential. Science has, however, changed
significantly since the first prizes were awarded. When Alfred Nobel signed his will in
1895, he could not have anticipated threats such as climate change and HIV/AIDS. Nor
could he have known of the new scientific disciplines that are generating results that will
transform our world for the better.
Many of these fields, as well as these challenges, do not fit well into the remit of the
prizes that he created. If the World Health Organization were to eradicate malaria, for
example, the achievement might not qualify for any of the existing prizes. Fundamental
breakthroughs in areas such as neuroscience and ecology, some of which will eventually
help tackle the threats mentioned above, are also going unrecognized.
We appreciate that the foundation is bound by Nobel's will. But we also note that the
foundation has shown flexibility in the past, the creation of the economics prize in 1968
being one example. With that in mind, we would like to recommend two changes that we
feel would align the prizes with current challenges:
1. The creation of Nobel prizes for the Global Environment and Public Health. The
new prizes would focus on applications of science rather than basic research. As with the
existing peace prize, organisations would be eligible. The environment prize would
recognise successes in promoting sustainability, mitigating climate change or reducing
biodiversity losses. The public health prize would recognise improvements in global
health, such as the reduction or eradication of disease. (We present these lists as
examples; they are not intended to be complete).
2. The expansion of, or an addition to, the prize for physiology or medicine to
recognise contributions from across the life sciences. Fields that are currently
excluded, such as ecology, would become eligible. More emphasis would be placed on
the rapidly expanding field of neuroscience. This could be achieved by expanding the
existing prize for medicine or physiology or by the addition of new prizes for
fundamental biology (including ecology, genetics and cellular, molecular and
evolutionary biology) and behavioral science (including psychology and neuroscience).
Over the past century, progress in the basic sciences has transformed our world and our
understanding of it. By recognizing the men and women that drove that progress, the
Nobel prizes have made the public aware of the enormous contribution that science has
made. Different forms of science and technology will transform our world during this
century. We feel that these suggestions will enable the prizes to appropriately recognise
future achievements, and to remain influential for another hundred years.

Yours Sincerely,



Larry Brilliant
President, Skoll Urgent Threats Fund and advisor, Google.org.



Rodney Brooks
Panasonic Professor of Robotics, Massachusetts Institute of Technology, and
founder of iRobot Corp and Heartland Robotics.



Peter Diamandis
Chairman and CEO, X PRIZE Foundation.



Tim Hunt
Cell Cycle Control Laboratory, Cancer Research UK.



David King
Director, Smith School of Enterprise and the Environment, University of Oxford.



Lynn Margulis
Distinguished University Professor, University of Massachusetts, Amherst.



Steven Pinker
Harvard College Professor and Johnstone Family Professor, Harvard University



Peter Raven
Director, Missouri Botanical Garden.



Frans de Waal
Director, Living Links Center and C.H Candler Professor of Psychology, Emory
University



E.O. Wilson
Pellegrino University Professor, Emeritus, Harvard University



cc: The Board of Directors of the Nobel Foundation

தாவர உண்ணி சிலந்தி.


ஐயா நான் தான் அந்த தாவர பட்சணி சிலந்தி பயல்.




சிலந்திகளை தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள் பல கொலிவூட் படங்களில் வந்து போன ஆபாயகரமான அங்கிகள் அவை நஞ்சு கொண்ட தத்திப் பாய்ந்து தாவிக் கொள்ளும் பெரும்பாலும் திரவ பதார்த்த உண்ணிகள் அதாவது அங்கிகளை கொண்று அவற்றின் தமது நொதியங்களால் சமிபாடடைய செய்து உறிஞ்சி உண்ணும் விலங்குகள் என இது வரை நாம் கற்று வந்துள்ளோம் பாத்து வந்துள்ளோம். ஆனால் முதல் தடைவையாக ஒரு தாவர பட்சினி சிலந்தி ஒன்று மத்திய அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.அக்கேசியா acacia எனப்படும் ஒரு புதர் ஒன்றின் குருத்துக்களை உண்ணும் ஒருவகை சிலந்திகளே அவ்வாறு கண்டறியப்பட்டுள்ளவை.Bagheera kiplingi எனப் பெயரிடப்பட்டுள்ள இது எட்டுக்கால்கள் கொண்டது மனித கைவிரல் நகம் அளவுதான் உள்ளது.
உலகொங்கும் உள்ள 40000 சிலந்தி இனங்களில் இது மிகவும் அரிதானதாக காணப்படுகின்றது.இவை தமது முழு வாழ் நாளையும் acacia மரங்களில் தான் செலவிடுவதாகவும் அவ்வப்பொது இலையுண்ணும் எறும்புகளால் தாவரங்கள் சூழப்படும் போது மாத்திரம் கீழ் இறங்கிய பின்னர் எறும்புகள் திரும்பிவிட அவையும் மீண்டும் ஏறிவிடுகின்றதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.அத்துடன் அவற்றிற்கு போசரணக்குறைபாடு ஏற்படும் இடத்து எறும்புகளில் குடம்பிகளை உடைத்து அதன் சாற்றையும் குடிக்கின்றன என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். என்னவாக இருந்தாலும் இதுவரை அடையாளப்படுத்தப்பட்ட பூமியில் உயிர் பல்வகைமையின் அளவு மிகவும் சிறியது என்னும் கருத்து மீண்டும் ஒரு முறை வலுப்படுத்தப்பட்டுள்ளது

அபாயத்தி்ல் மன்னார் கடல் குதிரைகள்.


கடல் குதிரைக் குட்டிகள்
இயற்கை அள்ளி தந்துள்ள அழகிய பூமியில் நாம் பலர் இன்னும் அறியாத அழகை கடல் கொண்டுள்ளது. அந்த வகையில் கடலில் எம்பி எம்பி நாம் சதுரங்கம் விளைாயடும் போது அசைக்கும் குதிரை போல் அசையும் கடல் குதிரைகள் நேரில் கண்டவர்களை கவரும் மறக்க முடியாத கடல் வாழ் அங்கி.
இது மட்டுமல்ல கண்களை எந்தப் பக்கமும் திருப்புதல், குதித்து குதித்து ஓடும் ஒருவகை மீன் இனம், குதிரை போன்ற முக அமைப்பு, குரங்கு போன்ற வால், ஆண் இனங்கள் இனப்பெருக்கம் செய்தல் இப்படியாக பல்வேறு சிறப்புகளையுடைய அரியவகை கடல்வாழ் உயிரினமான கடல் குதிரைகள் பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுய நிலையில் இன்று உலகம் உள்ளது
.இயற்கை வளங்கள் அதிகம் நிறைந்த மன்னார் வளைகுடா கடல் பகுதி தென் தமிழகத்தில்தான் உள்ளது. இங்கு உலகிலேயே வேறு எங்கும் இல்லாத சுமார் 3600 வகையான கடல்வாழ் உயிரினங்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த அரியவகை உயிரினங்களில் கடற்குதிரை என்னும் ஒருவகை மீன் இனமும் ஒன்று. இதன் தலையானது குதிரையின் தலைபோன்று இருப்பதால், இதற்கு கடற்குதிரை எனப் பெயர் ஏற்பட்டதாம்.




இராமேசுவரத்திலிருந்து தூத்துக்குடி வரையுள்ள ஆழம் குறைந்த கடல்பகுதியில் காணப்படும் இக் கடல் குதிரைகளின் வால் குரங்கின் வால் போல நீண்டும்,சுருண்டும் காணப்படுகிறது. இந்த வாலின் மூலம் கடற்தாவரங்கள், கடற்பஞ்சுகள் போன்றவற்றை பற்றிக்கொண்டு இருக்குமாம்.உடலமைப்பை பொருத்தவரை நன்கு நீண்டு வளையங்களால் அமைந்தது போன்றும் வாய் நீண்டு குழல் போலவும் மார்புப் பகுதி சற்று அகன்று விரிந்தும் காணப்படுகிறது. உடலில் பக்கவாட்டுக் கோடுகள் மற்றும் நீண்ட புள்ளிகள் தென்படுகின்றன. சுமார் 6 செ.மீ முதல் 17 செ.மீ வரை நீளமும் எடை 4 கிராம் முதல் 14 கிராம் வரையும் இருக்கிறது.முதுகுத் துடுப்பினைப் பயன்படுத்தி மெதுவாக நீந்தியும் பெரும்பாலும் குதித்துக் குதித்தும் செல்கின்றன. பிற விலங்குகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கடற் தாவரங்களுக்குள் மறைந்து கொள்கின்றன. கண்கள் சிறிதாக இருந்தாலும் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திருப்பிக் கொள்ளும் வசதியுடையதாகவும் உள்ளது.




தனக்குத் தேவையான மிதவை நுண்ணுயிரிகளை உறிஞ்சி வடிகட்டி உண்ணும் தன்மையுடையது.பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை (200) ஆண்களின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும். அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. குஞ்சுகளின் எண்ணிக்கையும் 50 முதல் 100 வரை இருக்கும். பிறக்கும் குஞ்சுகளின் நீளம் ஏறத்தாழ ஒரு செ.மீட்டராக இருந்தாலும் பெற்றோரின் பாதுகாப்பு அதிகமாகவே இருக்கும்.பல்வேறு சிறப்புகளை உடைய இந்த அரிய வகை கடல்வாழ் உயிரினத்தின் விற்பனை விலை கிலோவுக்கு ரூ. 2000 முதல் ரூ. 5000 வரை உள்ளது. சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவற்றின் மூலம் ருசி மிகுந்த சாறு வகைகளும், மருத்துவப் பொருள்களும் தயாரிக்கின்றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் இருமலுக்கு இதைப் பயன்படுத்துகின்றனர்.




உலர்ந்த கடற்குதிரையை வறுத்து அதன் தூளை தேனில் கலந்து குழந்தைகளுக்கு மருந்தாகக் கொடுக்கின்றனர். தேங்காய் எண்ணெயில் கலந்து வெட்டுக் காயங்களுக்கும் இப் பகுதி மக்கள் உபயோகிக்கின்றனர்.ஆஸ்துமாவுக்கும் சிறந்த மருந்தாக இருப்பதால், உலக அளவில் இது அதிகமாகத் தேவைப்படுகிறது.கடலுக்கடியில் சங்கு மற்றும் கடல் அட்டை போன்றவற்றை எடுப்போர் இதனையும் பிடிக்கின்றனர். கடலுக்குள் கடல் தாவரங்கள் உள்ள பகுதிகளுக்குள் மூழ்கி கடற்குதிரைகளையும் கைகளால் சேகரிக்கின்றனர். சுமார் 6 முதல் 10 மீனவர்கள் குறைந்தது 3 மணி நேரமாவது இதனைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதால், இந்த அரியவகை உயிரினம் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருகிறது.ஒரு படகுக்கு ஒரு நாளைக்கு 120 முதல் 350 கடற்குதிரைகள் வரை பிடிக்கப்படுகின்றன.




இது மட்டுமல்லாமல் சேது சமுத்திர திட்டம் காரணமாக ஆழமாகும் பாக்கு நீரிணையில் அலை வேகம் கூடுவதும் இதன் அழிவுக்கு காரணமாகிவிடும்.




அதி வேகமான அலைகள் இவற்றை அள்ளி செல்லும் ஏனெனில் இவை பாரம் குறைந்தவை மீன்களை விட மாறுபட்ட விதத்தில் நீந்தும் தன்மை கொண்டவை.




என்வோ மனிதன் தனது சொந்த தேவைக்காக இயற்கைணை மிகையளவில் பாவிக்க அவை தானாக அழிந்து ஓய்வு தேடிக் கொண்டுள்ளன.




இதற்கு முடிவும் மாற்று வழியும் மனிதனிடம் தான் உள்ளது

தோற்றுப்போனது நாசா.நாசாமாய் போனது நாசாவின் கனவு



நாசாவின் மோதுகை திட்டம்
சந்திரனில் தண்ணீர் உண்டா என ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட செய்கோள் நாசா எதிர்பார்த்த மாதிரியான தகவல்களை எதையும் தரவில்லை.
கடந்த வெள்ளி 08.10.2009 சந்திரனின் தெற்று துருவத்தில் பாரிய மேதுகை ஒன்றை ஏற்படு்த்தி சந்திர மேற்பரப்புக்குள் நீர் உள்ளதா என ஆராயும் முயற்சியை நாசா மேற் கொண்டது. அதுகும் இந்தியாவின் சந்திராயன் செய்கோள் செயலிழக்க முன்னர் சேகரித்து அனுப்பிய புகைப்படங்கள் சிலவற்றில் நீர் பனிக்கட்டி ஆதாரங்களை கொண்டு மேலும் ஆளச் சென்று தோண்டும் பணியை மும்முரமாக ஈடுபட்ட நாசா இறுதியில் ஒரு தகவலும் சரிவரக்கிடைக்காமல் கையறு நிலையில் உள்ளது.

தண்ணீர் இருப்பதாக கருத வைத்த படம்.

மோதலில் பின்னர் இரண்டு மணிநேரத்தில் தண்ணீர் உண்டா இல்லையா என்னும் பதில் கிடைக்கும் எனக் கூறி ஆவலுடன் காத்திருந்த நாசா விஞ்ஞானிகளை நாசமாய் போன அந்த சந்திரன் ஏமாற்றிவிட்டது.
மேதலின் பின்னர் வெளியான தூசுக்கள் எவையும் நீர் ஆவியையோ அல்லது நீரி்ன் வேறு வடிவங்களையோ கொண்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளது நாசா.
முன்னர் திட்டமிட்டபடி ஒரு செய்கோள் மோத மற்றயது கிட்டச் சென்று மோதலின் பின்னான விடங்களை படம் பிடித்து அனுப்பியது அதாவது தூசுப்படலங்களை படம் எடுத்து அனுப்பியது. இதை நுணுகி ஆராய்ந்து மண்டையை பிய்த்தும் பதில் இல்லாமல் தவிப்பதாய் கூறுகின்றது நாசா.இத்துடன் சந்திராயன் படங்கள் வெண் தூசுக்கள் உடையதாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றது.
இதில் எது உண்மை என்பது புரியவில்லை சந்திராயன் தகவல் சரியா இல்லை நாசாவின் இறுதித் தகவல் பிழையா?
நாசா லேசு பட்டதல்ல தனக்கு போட்டியாக யாரும் வராமல் இருக்க எல்லா தகவலையும் மூடு மந்திரமாக பேணும் கில்லாடி.
பார்ப்போம. விடயம் மலிந்தால் சந்தைக்கு வரும் தானே

சனி, 10 அக்டோபர், 2009

சனியில் உயிரினங்கள் இருக்காம்.அகதிகள் வாழ இடம் இருக்கா?



சந்திராயன் திட்டம்



உயிர் உள்ளதாக கருதப்படும் சந்திரன் துணைக்கோள்

சனிக் கிரகத்தின் துணைக் கோள் ஒன்று உயிர் வாழ் தகவுள்ளதாக கருதுகின்றனர் விஞ்ஞானிகள்.என்கிளேடஸ் எனப்படும் சனியின் சந்திரன் ஒன்றில் இவ்வாறு உயிர் இருக்காலம் என்றும் ஊகம் தொடர்ந்து வெளியிடப்பட்டுக் கொண்டுள்ளது.இவ் சந்திரனின் தென் பகுதியில் பாரிய நீர் ஊற்றுக்கள் உள்ளதாகவும் அவற்றில் இருந்து சீறிப்பாயும் நீர் அதன் வான வெளியில் வீசப்படுவதாகவம் அவர்கள் தெரிவிக்கின்ற்னர்.உயிரியலாளர் ஆபெல் மென்டிஸ் உருவாக்கியுள்ளஅளவறி வாழத்தகு கொள்கையில் அடிப்படையில் இங்கு உயிர் உள்ளதாக கருதப்படுகின்றது.தற்போதைக்கு இங்கு நுண் உயிர்கள் இருப்பதாக எதிர்வு கூறப்பட்டாலும் இதன் அமைவிடம் அதாவது இவ் சந்திரனின் அமைவிடம் காரணமாக இதை உறுதிப்படுத்தவோ அல்லது மேலும் ஆராய்ச்சிகள் செய்யவோ பல காலம் எடுக்கும்.
பூமியில் மாத்திரம் உயிர் உள்ளது என்னும் கொள்கை அடிபட்டுப் பொய் காலங்கள் ஆனாலும் பிறகொள் உயிரிகள் பற்றி உறுதியான தகவல்களை பொற்றுக் கொள்ள திணறுகின்றது வான் ஆராய்ச்சி.
ஆனாலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன ஏற்கனவே அண்டத்தின் பிறகோள்களில் உயிரிகள் உள்ளது பற்றி நாசா உறுதிப்படு்த்தியுள்ளது என்றும் ஆனால் அவர்கள் அமெரிக்கர்களை விட பெரும் சண்டியர்கள் தொழில்நுட்டப வாதிகள் எனக் கருதிவருவதால் அமெரிக்கா அந்த விபரங்களை வெளியிட்டு தனது செல்வாக்கு குறைவதை விரும்பாது மறைத்து வருகின்றது என்று கூறப்படுகின்றது.
ஏன் அண்மையில் கூட இந்தியாவின் சந்திராயன் கண்டறிந்துள்ள சந்திரனின் நீர் பற்றிய விடயம் கூட நாசா முற்கூட்டி அறிந்திருந்தும் அங்குள்ள பிற சில விலை மதிக்க முடியாத தாதுக்களில் கண்வைத்துள்ள காரணத்தால் வெளியில் சொல்லாமல் தவிர்த்து விட்டது என்று கருதுபவர்களும் உண்டு.
அது மட்டுமல்லாமல் சந்திராயன் திடீர் என செயலிழந்து போனது ஏன் என்று சிந்தித்தால் அனைத்துக்கும் ஒரு தொடர்பு உள்ளது என புரியும்.
அத்துடன் சந்திராயன் செயலிழக்க சில மாதங்கள் முன்னர் சந்திரன் நோக்கி இரண்டு செய்மதிகள் அனுப்பி இதை மோதி அங்குள்ள பொருட்கள் தாதுக்கள் என்ன என தான் ஆராய உள்ளதாக அமெரிக்கா கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.


நாசா சந்திரனில் மோதவிட்டுள்ள செய்கோள்.


என்வோ? சந்திரனில் என்ன செவ்வாயில் என்ன இல்லை வியாழனிலும் உயிர்வாழ் தகவுள்ள நிலைமை இருந்தால் அகதியாக அடைபட்டுக் கிடக்கும் அடிமையாக்கப்படவுள்ள மக்களை அங்கு குடியிருத்துங்கள்.
அங்கு தன்னும் ஒரு நல்ல கொட்டகை போட்டு வாழ அவர்களை விடுங்கள்.
முள்ளுக் கம்பிகளுக்குள் வாழவும் பலர் அரசியல் செய்யவும் பகடையாக அவர்கள் தொடர்ந்து இருக்க வேண்டாம்.

டைனோசர்கள் மிகப் பெரியவையா?




அண்மையில் டைனோசர்கள் பற்றிய கல்வியில் புதிய பரிணாமம் ஒன்று புகுந்துள்ளது. ஆதாவது பிரான்சின் யூராசிக் பார்க் என்றழைக்கப்படும் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள டைனோசரகளில் பாதப் படிவுகள் இன்று பல ஆராய்ச்சியாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.அதாவது உலகில் இதுவரை அவதானிக்கப்படாத அளவு மிகப் பெரிய இவ் டைனோசரின் பாதங்களின் சுவட்டு படிவுகள் டைனோசர்கள் பற்றிய அளவுகள் பற்றிய கருத்துக்களில் மாற்றங்கள் கொண்டு வரும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
பிளாங் என அழைக்கப்படும் பிரான்சின் டைனோசர்கள் முன்னர் வாழ்ந்து மறைந்து போனதாக கருதப்படும் பகுதியில் இவை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.இவை தாவர பட்சினிகளாகவும் நீண்ட கழுத்துடனும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இங்கு கண்டறியப்பட்டுள்ள பாதத்தின் படிவுகள் 1.5 மீற்றர் அகலம் (விட்டம்) கொண்டு்ள்ளதாகவும் 25 மீற்றர் நீளம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் இது ஏறத்தாள 40 தொன் எடை கொண்ட டைனோசர்களின் பாதங்களின் படிவுகள் எனத் தெரிவிக்கின்றனர்.இது சரோபோட் வகை டைனோசரினது எனக் கூறப்படுகின்றது.இவ் பாதங்கள் சுண்ணாம்புக்கலில் படிந்துள்ளதால் இவ்வளவு தொழிவாக காணப்படுகின்றதாகவும். இவ் சுண்ணாம்புக்கற்கள் 150 மில்லியன் ஆண்டுகால காபன் னாலக்கணிப்பை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

வெள்ளி, 9 அக்டோபர், 2009

நாகரீகக் குப்பை மேடாகும் உலகம்.







உலக மயமாதல் நன்மை தீமை என்னும் இரண்டு வடிவத்தில் பூமியில் இன்று அதிகளவில் கோலோச்சி வருகின்றது.இதில் நன்மைகள் நன்மைகளாக இருப்பதையிட்டே நாம் அதிகம் கவனம் செலுத்துகின்றோம் அதில் நன்மைகளை தொடரவே விளைகின்றோம் ஆனால் ஒரு நன்மையை காண அதை உணர நுகர நாம் தெரிந்தோ தெரியாமலோ ஏற்படுத்தும் தீமைகள் என்ன என்பது பலரும் கண்டு கொள்வதில்லை கண்டாலும் கவனிப்பதில்லைஉலக மயமாதலின் அடிப்படையை உருவாக்கிய புரட்சிகள் அதாவது கைத் தொழில் விவசாயம் முக்கியமாக தொழில் நுட்பம் என்பன மனித சந்ததிக்கு சந்ததி பெரும் போட்டி நிலைமையை உருவாக்கி தமக்கிடையிலும் ஒரு சந்ததிப் போட்டியை உருவாக்கி விட்டுள்ளன.ஆனால் இன்றைய உலக மயமாதலின் போக்கு மாற மாற்றப்பட தொழில் நுட்ப புரட்சி ஆற்றிய பங்கு அளப்பரியது ஆற்றிக் கொண்டுள்ள பங்கு அளவிடமுடியாதது.அதை 700 கோடியை அண்மிக்கும் உலக மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் நேரடியாக உணர்கின்றார்கள் அதன் பால் பயன்களை ஈட்டுகின்றார்கள்.இந்த நிலையில் தொழில் நுட்ப புரட்சி நமக்கு நேரிடையாக அள்ளித் தரும் நன்மைக்கு ஆப்பால் மறைமுகமாக நமக்கு செய்யும் தீமைகள் பற்றி நாம் இன்றும் விழிப்படைய வில்லை.அதை எதிர் கொள்ள தயாராகவும் இல்லை.தொழிநுட்பங்கள் இலத்திரனியல் என்னும் வடிவில் எமது பணிகளை இலகுவாக்கியுள்ளது ஆனால் பூமியின் இருப்பை அது எந்த அளவில் கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்பது அண்மை காலங்களில் உலகம் புரிய ஆரம்பித்துள்ளது.இன்று சாதாரண பாமர மக்கள் முதல் கற்றறிந்த அறிஞ்ஞர்கள் வரை தொழில் நுட்பற்களுக்கு அதாவது இலத்திரனியலுக்கு அடிமைகள் அதுவும் புதுப்பிக்கப்படும் நவீன தொழில் நுட்பங்களின் மீதான தீராத அடிமைகள்.வீட்டின் அங்கத்தவர்கள் ஆகிவிட்ட தொழில் நுட்பப் பொருட்களுடன் எங்கள் வாழ்க்கைகள் நகர்கின்றன.இதற்கேற்றவாறு அதாவது எமது தேவைக்கேற்பவாறு புதிய வசதிகளை மக்களின் வேலைகளை இலகுவாக்கும் சாதனங்களை படைத்துவிடவேண்டும் என்னும் வேகம் படைப்பாளிகளுக்கு உண்டு.இலத்திரனியல் சாதனங்கள் பலவற்றின் பயன்பாடுகள் உளவியல் மற்றும் உடலியல் ரீதியாக உயிர்களை பாதிப்பதற்பகான ஆதாரங்கள் இன்று பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் இவை சூழலுக்கு செய்யும் மோசமான விழைவுகள் பற்றி விழிப்பு இன்றும் வரவில்லைவெளிப்பார்வையில் வெறும் பொருளாக காணப்படும் இவ் இலத்திரனியல் சாதனங்கள் மொத்த்தில் ஒரு விடப்பெருள்.ஓவ்வொரும் இலத்திரனியல் சாதனமும் அவற்றின் உள்ளடக்கங்களும் பல உக்காத மூலகங்கள் நச்சுப் பொருட்களின் இருக்கைகள்.இவ் நச்சுக்களை பூமிக்கு சேர்க்கும் களஞ்சியங்களை அவை.உதாரணமாக1 பி.வி.சி எனப்படும் அதிகளவு இலத்திரனியல் சாதனங்களில் காணப்படும் சேர்க்கை எரியும் போது வெளிவிடும் புகை ஓமோன் வெளியிடுகைள தடுக்கும்.2.ஆசனிக் :கணணி மற்றம் கைபேசிகளின் சில்லிகள் (சிப்புகளில்) காணப்படும் பற்றுநோய்க் காரணியாகும்.3.கட்மியம் :மின்னகலங்களின் பொதுவாகக்காணப்படும் இது சுவாசக் குiறாபடுகள் மற்றும் இரத்த அழுத்தம் சிறுநரக நோய் முக்கியமாக புற்றுநோய் காரணியாகும்.4.இரசம் :புளோரொளிர் மின்குமிழ் மற்றும் மின்கலங்களில் காணப்படும் இது தோல் வியாதிகள் சுவாசக் குறைபாடுகள் இருதயக் குறைபாடுகள் தோல் மற்றும் கண் பாதிப்புகளுக்கு வழி வகுக்கும் நீண்டநாள் தாக்கமாக பிறப்பு குறைகாடுகள் மூழை மற்றும் சிற நீரக நோய்களை உருவாக்கும்.5.குறோமியம் : புற்றுநோய் காரணி என்பதுடன் பிறப்புரிமைப் பொருளான டீ.என்.ஏ இல் பிறள்வுகளை ஏற்படுத்தும் விகாரமாக்கியாகும்.6. ஈயம் பொதுவான இது பசியின்மை மன அழுத்தம் தலை வலியை ஏற்படுத்தும் தொடர்ந்து நீண்டநாள் தாக்கமாக முழைப் பாதிப்பு மற்றும் நரம்புத் தாக்கத்தை ஏற்படுத்தும்.7.பேரியம் நாகம் செலினியம் ஆகியனவும் இலத்திரனியல் சாதனங்களில் காணப்பட்டு காலாகாலம் ப+மியில் இருந்து சூழலில் தாக்கங்களை ஏற்படுத்தும்.இவை தவிர சிறிய அளவில் ஏராளமான நச்சுப் பொருட்களையும் இவை கொண்டுள்ளன.புதிய வருகைகள் மற்றும் பழுதுகள் காரணமாக பாவனையாளர்களாகிய நாங்கள் இலத்திரனியல் சாதனங்களை கைவிடும் போது மேல் சொல்லப்பட்ட அபாயகரமான பதார்த்தஙகளை விட வேறு பல பதார்த்தங்களையும் கொண்ட இலத்திரனியல் கழிவுகளை கொட்டுகின்றோம்.அதாவது உலகளாவிய ரீதியில் நாளுக்கு 112000 கணினிகள்.மற்றும் பல லட்சம் மின்கலங்கள் இதேபோன்று 140 மில்லியன் கைத் தொலைபேசிகளின் உதிரிபாகங்கள் வேறு வீட்டு பாவனை இலத்திரனியல் சாதனங்கள் இறுவட்டுக்கள் என சமையலறை முதல் சுவாமி அறைவரை இவற்றின் ஆதிக்கம் உள்ளது பல பொருட்களை கைவிடுகின்றோம்.இவற்றின் மூலம் வருடம் 40 மில்லியன் முதல் 50 மில்லியன் தொன் வரையான இலத்திரலனியல் கழிவுகளை பூமி சேர்த்துக் கொள்ளுகின்றது. இவை இன்று நம்மை பாதிக்க காலம் எடுத்தாலும் காத்திருந்து நமது அடுத்த சந்ததிக்கு பாதிப்பை எற்படுத்தும் தன்மை கொண்டவை.ஏனவே வளரும் நாட்டவர் ஆகிய எம்மை நாகரீகம் வளர்ச்சி என்னும் பதப் பிரயோகங்களுடன் அணுகும் இவ் பாரிய எரிதிகளிடையே இலாபத்தையும் கவர்ச்சியையும் காணாது அதன் உள்ளே புதைந்துள்ள ஆபத்தை உணர்ந்து அதற்கேற்ற வழியில் நடந்து கொள்ள வேண்டும்.

Thanks Internews Srilanka

புதன், 7 அக்டோபர், 2009

பெருமை சேர்த்த தமிழர்.




தமிழன் ஒருபக்கம் துன்பப்பட்டுக் கொண்டு அகதியாய் அலைந்து கொண்டும் உள்ளபோது தமிழுக்கும் தமிழர்க்கும் பெருமை சேர்ப்பவர்களும் இருக்கின்றோம் என காட்டிக் கொண்டு உள்ளார்கள் தமது திறமைகளால்.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை வென்று தமிழர்க்கு பெருமை சேர்த்துள்ளார் தமிழகத் தமிழன் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்.
1952 இல் தமிழகம் சிதம்பரம் பெற்றெடுதத்து தந்த தமிழர் இவர்.
அமெரிக்காவின் எம்.ஆர்.சி ஆய்வகத்தில் மரபணுக்களின் குறைபாட்டில் புரதத் தொகுப்பு ரைபோசோம்களின் பங்கு பற்றி இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளுடன் இணைந்து அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிக்கு இரசாயனவிலுக்கான நோபல் பரிசு இம்முறை கிடைத்துள்ளது.

செவ்வாய், 6 அக்டோபர், 2009

சனிக் கிரகத்தில் மகா வளையம்.


சனியின் வளையம்.

சனிக் கிரகத்தில் மகா வளையம் ஒன்றை படம் பிடித்துள்ளதாம் நாசாவின் ஸ்பிற்சர்
தொலைகாட்டி.
இது வரை காணப்படாது கண்காணிக்கப்படாத இவ் பாரிய தூசு வளையம் தற்போது தரமுயர்த்தப்பட்டுள்ள இவ் தொலைக் காட்டியின் ஊடாப கடம் பிடிக்கப்பட்டுள்ளது.
புவி மேற்பரப்பில் இருந்து 7 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் ஆரம்பிக்கும் இவ் தூசு வளையம் 12 மில்லியன் கிலோமீற்றர் வரை பரந்து விரிந்து செல்வதாகவும் கணிக்கப்பட்டுளது.
இவ் வளையத்தினுள் பூமியின் அளவு கொண்ட கோள்களை மில்லியன் கணக்கில் அடக்கிவிட முடியும் என கூறுகின்றனர்.
இதில் என்ன புதினம் உள்ளது என பலர் நினைக்கலாம். ஆனால் புதினங்கள் இனித்தான் ஆரம்பமாக போகின்றது.
இதுவரை கண்ணில் படாமல் இருந்து வந்த இவ் வளையம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது மறைந்துள்ள பல இரகசியங்களை வெளிக் கொண்டுவர ஆரம்பிக்கப்பட்டுள்ள படி இது என கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.

திங்கள், 5 அக்டோபர், 2009

கிரிக் கெட்டில் மீண்டும் சூதாட்டமாம்.







பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடந்த ஐ.சி.சி சம்பியன் கிண்ணத்துக்கான அரையிறுதிப்போட்டியில் கிரிக்கட்ட சூதாட்டம் நடந்துள்ளதாக சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


பாகிஸ்தான் அணித் தலைவர் யூனிஸ்கான் நடந்து கொண்ட விதம் இவ் சந்தேகத்துக்கு காரணமாக தெரிவிக்கப்படுகின்றது.


மிகவும் விறுவிறுப்பான இப் போட்டியில் முதலில் துடுப்பொடுத்தாடிய பாகிஸ்தான் 234 என்னும் வெற்றி இலக்கை நிர்ணயி்த்து இருந்துபோது பதிலுக்கு துடுப்பெடு்த்து ஆடிய நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் கிறான்ற் எலியட்டின் பிடி ஒன்றை யூனிஸ்கான் தவறவிட்டது இச் சர்ச்சைக்குரிய முக்கிய காரணம்.





மிக இலகுவான பிடி ஒன்றை 40 ஆவது ஓவரில் தவற விட்டு இறுதியில் தோற்று இறுதிப் போட்டியில் பங்கு கொள்ள முடியாமல் நாடு திரும்பும் பாக் மீது சந்தேகக் கண்கள் விழ ஆரம்பித்துள்ளது.


மிகப் பொறுப்பான அணித் தலைவராக இருந்து அணியை வழி நடத்தவேண்டிய யூனிஸ் அந்த பிடியை தவற விட்ட பின்னர் தெரிவித்த கருத்தும் இவ் சந்தேகத்தை வலுப்படுத்தும் படியாக உள்ளது.





அதாவது தனது கைவிரலில் ஏற்பட்டிருந்த காயத்தை பாதுகாப்பவே தான் அந்த பிடியை தவற விட்டதாக தெரிவித்துள்ளார் யூனிஸ்கான்


ஒரு பொறுப்புள்ள அணித் தலைவர் பெறுப்புடன் குறிப்படக் கூடிய கருத்து இல்லை எனத் தெரிவிக்கும் கிரிக்கட்ட கவுன்சிலின் ஊழல் தடுப்பு பிரிவு.இது சம்பந்தமாக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.





உணவின்றி தூக்கமின்றி கண்விழித்து நம்மில் பலர் கிரிக்கெட் பைத்தியமாக அலைவது இது போன்ற சூதாட்ட போட்டிகளை காணவா?

Doubts cast over Pakistan dropped catch AAP

Pakistan captain Younus Khan's dropped catch at a crucial point in Saturday's Champions Trophy cricket match against New Zealand has roused suspicions of corrupt play.
While strenuously denying deliberately dropping the ball, Younus conceded that the dropped catch cost his team the Champions Trophy semi-final match in Johannesburg on Saturday.
But the International Cricket Council's (ICC) anti-corruption unit will be having a good look at the match, according to the Ahmedabad Mirror. However the newspaper noted: "It would be jumping the gun at this stage to suggest a hanky panky semi-final."
The match was evenly poised when Younus dropped Grant Elliott in the covers off teenage fast bowler Mohammad Aamer in the 40th over, with the New Zealand batsman then on 42 in his team's total of 4-165.
New Zealand needed 69 to win at that stage with six wickets in hand, but Elliott steered his team home with a crucial 104-run stand for the fifth wicket with skipper Daniel Vettori (41).
"The officials are guarded in their reactions at this stage, but indeed, the tapes of the Pakistan-New Zealand semi-final match are on their way to the anti-corruption unit," the newspaper reported.
Younus "shockingly" gave priority to the safety of an injured finger to making the catch, it said.
The Pakistan captain showed an after-match press conference the bandaged little finger of his right hand, and said the reason he missed the catch was because he was trying to protect a fractured finger.
"When I ran Gautam Gambhir out with the same hand, people clapped and said `what a patriot, playing for the country with a broken finger'," he said.
"Now, the same people will call me names, they will suggest I was up to something. I am not worried about anything."