செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

5 காலநிலை பருவங்களை தேடும் அவுஸ்ரேலியா.








5 காலநிலை பருவங்களை தேடும் அவுஸ்ரேலியா.



அவுஸ்ரேலியா வேறுபட்டுவரும் சூழல் நிபந்தனைக்கு ஏற்ப தனது நாட்டு அன்றாட நடவடிக்கைக்கான கட்டமைப்பை இலகு படுத்த 5 காலநிலைப்பருவங்களை அமைக்க வேண்டிய நிலைக்கு சென்றுள்ளதுடன் அதற்கான காலநிலைப்பருவங்களை வரையறுக்கும் வேலையிலும் இறங்கியுள்ளது.தற்போது உள்ள பிரித்தானியாவினை பின்பற்றி கொண்டுள்ள 4 காலநிலைப்பருங்வங்களில் இருந்து விடுபட்டு 5 காலநிலைப்பருவங்கள் என்னும் நிலைக்குள் வெகுவிரைவில் பிரவேசிக்கவுள்ளது.சிட்னியில் உள்ள றோயல் தாவரவியல் பூங்காவின் தலைவர் தற்போது அவுஸ்ரேலியா தேடிவரும் காலநிலைப்பருவங்களுக்கு “SPRUMMER” எனப்படும் இலை உதிர் மற்றும் கோடைகாலத்துக்கு இடைப்பட்ட காலநிலைப்பருவத்தையும்.“SPRINTER” ஸ்பிறின்ரர் எனப்படும் முன் இலையுதிர் காலநிலைப்பருவத்தினையும் முன் மொழிந்துள்ளார்.இவ் புதிய காலநிலைப்பருவங்கள் மக்கள் தமது சூழலைப்புரிந்து காலநிலையில் மாற்றங்களை உணர்ந்து தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.இதுவரை இருந்து வந்த ஐரேப்பா மாதிரியான மூன்று மாதங்கள் கொண்ட நான்கு காலநிலை பருவங்கள் எமது வாழ்வியலின் சிறப்பு உணர்திறன் ஒன்றையும் ஏற்படுத்துவதில்லை எனத் தொவித்துள்ள சிட்னி தாவரவியல் பூங்கா தலைவர் அவுஸ்ரேலியாவின் சில பாகங்களில் உள்ள பழங்குடியினர் 8 காலநிலைப்பருவங்களை வருடத்துக்கு அறிவித்து நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.இது சம்பந்தமாக பொதுமக்கள் கருத்து கேட்கப்படவுள்ளதுடன் சூட்டப்பட்டுள்ள பெயர்ககும் பொதுமக்கள் கருத்துக்கு விடப்படவுள்ளன.மத்திய கோட்டை அண்மித்துள்ள நாடுகள் பல இன்னனும் கோடை மற்றும் மாரி என்னும் காலநிலைப்பருவங்கிளில் தங்கியுள்ள நிலையில் பூமியில் வேகமாக மாறிவரும் காலநிலை பிற சில பகுதிகளை எந்த அளவில் அன்னறாடம் பாதிக்கின்றது என்பதற்கு இது நல்ல சான்றாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக