திங்கள், 24 ஆகஸ்ட், 2009

முகிலில் இருந்து வான் நோக்கிய மின்னல் அதிர்ச்சியில் விஞ்ஞான உலகம்.










முகிலில் இருந்து வான் நோக்கிய மின்னல் அதிர்ச்சியில் விஞ்ஞான உலகம்.




இதுவரை முகிலில் இருந்து பூமிநோக்கி பாயும் ஒளிக் கீற்றாக மின்னலை அவதானித்து அறிந்து வைத்திருந்த அனைவருக்கும் அண்மையில் கிடைத்துள்ள விஞ்ஞான பூர்வமான ஆதார பூர்வமான தகவல் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதாவது மின்னல் எப்போதும் முகிலில் இருந்து தரை நோக்கி பாய்வதில்லை மாறாக வான் நோக்கியும் பாயும் என்பதை புகைப்பட ஆதாரமாக்கியுள்ளனர் விஞ்ஞானிகள்.முதன் முதலில் 2001 ஆம் ஆண்டு இவ்வாறு ஒரு மின்னல் அவதானிக்கப்பட்ட போது அது பிரமை என் எண்ணிய பலர் தற்போது அது புகைப்பட ஆதாரமாகியதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்."ஜிகான்ரிக் ஜெட் "எனச் பெயர் சூட்டப்பட்ட இவ் வான் நோக்கிய மின்னல் சாதார மி;னனல் போன்ற குணாம்சங்களை கொண்டுள்ளது.முகிலில் இருந்து புறப்படும் இவ் வான் நொக்கிய மின்னல் அது மின் வலுவை இழக்கும் வரை வானில் நீழ்வதாகவும் அதாவது வானின் வாயுமண்டல எல்லையில் காணப்படுகின்ற அயன்கோளம் வரை நீழ்வதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.அதாவது மின் ஏற்றங்கள் கொண்ட இவ் அயன் மண்டல பகுதியில் இவ் மின்னல் மின்னிறக்கம் அடையும் வரை இது வானில் நீழ்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த 2001 இல் இருந்து 11 இவ்வாறான மின்னல்கள் அவதானிக்கப்பட்டுள்ள போதும் இது புகைப்படம் பிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் தடைவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக