செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

பூமியில் முதல் உயிர் அங்கி தோன்றியதற்கான மூலப்பொருள் வால் நட்சத்திரத்தில்.

பூமியில் முதல் உயிர் அங்கி தோன்றியதற்கான முலப் பொருள் வால் நட்சத்திரத்தில்.
பூமியில் முதல் உயிர் தோன்றியதற்கு காரணம் என்ன என்னும் விவாதம் விஞ்ஞான மற்றும் ஆன்மீக ரீதியில் முட்டி மோதி வரும் நிலையில் வால் நட்சத்திரம் ஒன்றில் இருந்து பூமியில் முதல் உயிரி தோன்றக்காரணமானதாக கருதப்படும் அமினோ அமிலம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
கிளைசீன் எனப்படும் அமினோ அமிலம் ஒன்றே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஒரு வால் நட்சத்திரத்தில் இவ்வாறு ஒர் அமினோ அமிலம் கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதல் தடைவை எனவும் இவ் ஆராய்;ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இக் கண்டறிவானது இதுவரை கருத்தளவில் இருந்து வந்த உயிர் முலப் பொருட்கள் முதலில் அண்டத்தில் தோன்றி பின்னர் அண்ட பொருட்களான வால் நட்சத்திரங்கள் மற்றும் விண் கற்கள் மூலம் பூமியை அடைந்துள்ளன என்றும் கூற்றை பலப்படுத்தியுள்ளது எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
“வைல்ட்-2” என்னும் வால் நட்சத்திரத்தில் இருந்து கடந்த 2004 இல் சேகரிக்கப்பட்ட சில மாதிரிகள் வாயுக்களை ஆராய்ந்ததில் இவ் உயிர் அங்கிகள் உருவாக காரணமான அடிப்படை பதார்த்தமான கிளைசீன் கண்டறியப்பட்டுள்ளமை விஞ்ஞான உலகில் ப+மியின் முதல் உயிரி எவ்வாறு தோன்றியது அதன் பின்னான கூர்ப்புகள் மூலம் இன்றைய பல்வகைமை எவ்வாறு பெருகியது என்னும்; பலவேறு பட்ட சர்ச்சைகளுக்கும் வினாக்களுக்கு விடை கிடைக்கும் என நம்பப்படுகின்றது.
இதுவரை கடலடி எரிமலைகள் மூலமாகவும் மின்னல் தாக்கங்கள் மூலமாகவும் உருவாகிய சேதனங்கள் ஒன்றாகி கடலில் முதல் உயிர் மூலக்கூறு உருவானதாக விஞ்ஞான உலகம் கூறிவருகையில் ஆன்மீக உலகு கடவுளால் உயிர் அங்கிகள் சிருஸ்டிக்கப்பட்டு பூமியில் உலாவ விடப்பட்டுள்ளன எனக்கூறிவருகின்றது இவை அனைத்துக்கும் தீர்க்கமான முடிவு வரும் காலங்களில் பாடப்புத்தகங்களில் ஒர் ஆங்கவரலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக