புதன், 23 செப்டம்பர், 2009

அம்புலி மாமாவில் தண்ணீர் இருக்கிதாம்..



விஞ்ஞானம் சாதித்துக் கொண்டும் புதியனவற்றைக் கண்டு கொண்டும் தான் இருக்கும் பழையன விஞ்ஞானத்தில் பழையன தான் என மீண்டும் நிரூபித்துள்ளது.நீர் அற்ற சடத் திணிவு எனக் கூறப்பட்டு வந்த சந்திரனில் நீரைக் கண்டுவிட்டனர் ஆராய்ச்சியாளர்கள்.
அண்மையில் சந்திரனை




சந்திரனின் தெற்கு முனை


ஆராயவென 2020இல் தரையிறங்கும் நோக்குடன் அமெரிக்கா அனுப்பிய வெவ்வேறு செய்கோள்கள் மூன்று மற்றும் இந்தியானிவின் சந்திராயன் 1 இறுதியாக மேற்கொண்ட ஆய்வுகளின் பின்னர் திடுக்கிடும் யாரும் எதிர்பார்த்திராத முடிவுகளை வெளியிட்டுள்ளது நாசா.

சந்திரனின் வெவ்வேறு உயர தோற்றம்

சந்திரனில் தணிணீர் உண்டாம்.
கேட்கவே மனதில் ஒரு கிளர்ச்சி.உண்மையில் ஆனால் இது வரை அது பற்றிய புகைப்பட ஆதாரங்கள் எதையும் நாசா வெளியிடவில்லை ஆனால் பாரிய விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சந்திரனி
ன் முனைவுப்பகுதிக
ளில் இவ் நீர் பெருமளவில் காணப்படுவதாகவும் மில்லியன் கணக்கான கலன்களில் நிரை பெற்றுக் கொள்ளும் அளவில் அங்கு நீர் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் அண்மையல் செயலிழந்த சந்திராயன் செய்கோள் தகவல்கள் அடிப்படையின் திருசியமானித் தகவல் திரட்டுக்கள் ஆராயப்பட்டு இவ் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது வரைக்கும் தாம் தடாகங்கள் கடல் சமுத்திரங்கள் மற்றும் பற்றி பேசவில்லை நீர் மூலக்கூறுகளின் பிரசன்னம் அதாவது அவை வேறு மூலகங்களுடன் இணைந்து சேர்வைகளாகவொ அன்றி தூசுகளுடன் இணைந்த நிலையிலொ ஐதரொட்சைட்டுக்களாகவோ காணப்படுவதையே பேசுகின்றோம் எனக் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.
சந்திரனின் வெவ்வேறு வெப்ப நிலைகள் இரவு பகலில்

எனவே இடத்தை கண்டால் மடத்தை கட்டு என்னும் முது மொழிக்கு அமைய அமெரிக்கர்கள் வெகு விரைவில் சந்திரன் நோக்கிய தமது பார்வையை இன்னும் அதிகப்படுத்துவார்கள் நீருக்கல்ல அங்கு கிடைத்தற்கரிய வேறு கனிமங்கள் உண்டா எனப் பார்க்க.அவை அவை கிடைக்கும் போது சந்திரனில் கடை வைப்பார்கள் ஆனால் கதையை வெளியில் விடமாட்டார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக