வெள்ளி, 25 செப்டம்பர், 2009

அவுஸ்ரேலியப் பழங்குடியினர் தமிழ் வழியா?





ஆபோரினஸ் பழங்குடி சிறுவர்கள்.


அவுஸ்ரேலியா பழங்குடி ஆபோரினஸ் மக்களுக்கும் தென் ஆசிய மக்களுக்கும் ஆதாவது தமிழ் மக்களுக்கும் தொடர்பு உள்ளதாக ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்கள் தென்ஆசியாவில் இருந்து
சென்றவர்கள் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாப் பகுதியில் உள்ளவர்களின் பிறப்புரிமை அமைப்பு மற்றம் ஆபோரியினஸ் அவுஸ்ரேலியர்களின் பிறப்புரிமை அமைப்பு இரண்டும் ஒத்துப்போவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
ஆபோரினஸ் ஆண்

இந்தியா ஆராய்ச்சியாளர் ராகவேந்திரா ராஜோ மற்றும்
அவர் குழுவினர் 966 பேரிடம் அதாவது 966 இழைமணியின் பிறப்புரிமை பொருளின் டீ.என்.ஏ ஜுனோம்களை வரைபடமாக்கிய விடத்து அவை மூலம் இத் தகவலை பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இழைமணி பெண்களிடம் இருந்து அதாவது தாயிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்படும் முழுமையான பிறப்புரிமை பொருளை கொண்டுள்ளதால் அதை சிறப்பாக ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவது பொதுவானது.
அவுஸ்ரேலியா ஆபோரியினஸ் மற்றும் தென்னிந்திய மக்கிளிடையே ஒரே வகையான விகாரங்கள் காணப்பட்டதாவும் அதன் மூலம் தெற்கு வழி எனப்படும் தென்னாசியாவின் பாதைகள் ஊடாக இவர்கள் 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வருடக் காலப்பகுதயில் வேட்டையாளர்களாகவோ அன்றி பொருட் சேகரிப்பாளர்களாகவோ அங்கு சென்று குடியுறி இருக்கலாம் என்று மேலும் தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
எனவே தமிழன் குறிப்பாக திராவிடர் பல இடங்களின் குடியேறி உள்ளார்கள்.
காலப்பொக்கில் எரிப்பு ஆழிப்பு திரிப்பு என அவர்கள் வரலாறுகள் திரிக்கப்பட்டுள்ளன.
இதனால் இன்று பாதிக்கப்பட்ட சமூகமாக அனுதாபம் தேடி அலைகின்றார்கள்.
ஆண்டவர்கள் முன்னையவர்கள் வி்ட்ட தவறினால் இன்று மண்கேட்டு நிற்கவேண்டிய நிலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக