திங்கள், 19 அக்டோபர், 2009

சூரியக்குடும்பத்துக்கு வெளியே 32 புதிய கோள்கள் கண்டறியப்பட்டன


புவியும் மற்றய பல கோள்களும் அடங்கியுள்ள எமது சூரியக்குடும்பத்துக்குவெளியே சுற்றொழுக்கில் சுற்றி வருகின்ற புதிய கோள்கள் 32 இனை ஐரேப்பிய வானியலாளர்கள் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.ஐரோப்பிய தென் கண்காணிப்பு தொலைநோக்கியின் ஊடாக அவதானித்தததில் இவ் கோள்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவற்றில் எவையும் புவியின் அளவிலோ அல்லது உயிர் வாழக்கூடிய நிலையிலோ இருப்பதற்கான சான்றுகளை தொலைக்காட்டி காட்டவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இவ் புதிய கோள்கள் அவதானிக்கப்பட்டதுடன் சூரிய மண்டலத்துக்கு வெளியே மொத்தமாக 400 மேற்பட்ட கோள்கள் அவதானித்துள்ளதாக ஐரோப்பிய வானிலை ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இவற்றில் 6 கோள்கள் புவியை விட பெரியனவாகும் அவை சுப்பர் ஏர்த் அதாவது மிகை பூமிகள் என அழைக்கப்படுகின்றன.ஏனையவற்றில் பெரும்பாலானவை பூமியை விட சிறியனவாக உள்ளதாகவும் சில வியாழன் போன்று மிகப் பெரிதாக உள்ளதாயும் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இவ் கோள்களின் கண்டறிகையானது கோள்கள் தோன்றியுள்ளதாக கருதப்படும் கொள்கையை பலப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் புவிபோன்ற பலகோள்கள் அண்டத்தில் பரந்திருப்பதை தம்மை நம்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் இயற்கை வெறும் வெற்றிடம் இல்லை அங்கு அண்டம் இருந்தால் அங்கு கோள்கள் பரந்து கிடக்கின்றன எனவும் தெரிவித்துள்ளனர்.
இவ் 32கோள்கள் கண்டறியப்பட்டது ஒரு சாதனை என்றும் கோள்கள் கண்டறிவதில் ஐரோப்பிய வானவியலாளர்கள் முன்னோடிகள் என்பதை நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள ஐரோப்பிய வானவியலாளர்கள் தாம் உயர் துல்லியம் மிக்க ஆரைவேகக் கோள்கள் தேடும் பொறிமுறை கொண்ட சில்லியில் அமைந்துள்ள தொலைநோக்கியால் இவ் கண்காணிப்பை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த கண்டறிவைச் செய்தது கார்ப HARPS எனப்படும் தொலை நோக்கி எனவும் இது இதுவரை 75 வரையான வேறு சூரிய மண்டலக் கோள்களை கண்டறிந்துள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

நன்றி
http://www.eso.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக