வெள்ளி, 23 அக்டோபர், 2009

பட்டினிச்சாவின் விளிம்பில் 6 மில்லியன் எதியோப்பியர்




எதியோப்பியாவில் 6 மி்ல்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கி இருப்பதாகவும் தமக்கு உடனடியான உணவு தேவையை பூர்த்தி செய்யும் படியும் ஏதியோப்பியா கோரியுள்ளது.கடந்த காலங்களில் அங்கு நிலவிய பொதுவுடைமை கொள்கைகள் காரணமாக முதலாளித்துவ நாடுகளால் ஒதுக்கப்பட்டு இருந்த எதியோப்பியாவில் தற்போது வரைக்கு மில்லியன் மக்கள் பட்டிணியால் இறந்துள்தை சுட்டிக்காட்டியுள்ளது அத்துடள் அந் நாடு பாரிய தொண்டு நிறுவனற்களின் உடனடியான நிவாரணப் பணியையும் கோரியுள்ளது.
தற்போது ஆபிரிக்காவின் சில நாடுகளில் நிலவி வருகின்ற மிகப் பெரும் வறட்சியும் இதற்கு காரணமாகியுள்ளதை தொடர்ந்து அங்கு மிக்ப் பெரும் பட்டினிச் சாவு நிலைமை தோன்றியுள்ளது.ஏற்கனவே கென்யா மற்றும் சூடான் என்பன கடும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளன.தொடரும் வறட்சி காரணமாக 60 வீதமான மக்கள் தமது வாழிடங்களில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் பல விளை நிலங்கள் கைவிடப்பட்டு மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றது.தற்போதைய நிலையில் 8.5 மில்லியன் எதியோப்பியர்களில் 4.5 மில்லியன் எரியோப்பியர்களுக்கு உடனடியாக உணவு உதவி தேவை என்றும் உதவியாக தமக்கு 121 மி்ல்லியன் அமெரிக்க டொலர் தேவை என்றும் எதியோப்பிய விவசாய அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.கடந்த பலகாலமாக சக்கரச் செயற்பாடாக நிகழும் வறட்சி காரணமாக எதியோப்பியா தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் 1984 இல் நிகழ்ந்த பாரிய வறட்சி காரணமான தாக்கங்கள் உலக கவனத்தை ஈர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.தற்போதும் அதே நிலைமையை ஒத்த நிலைமை உருவாகி வருகின்றதாக தொண்டு பணியாளர்கள் தெரிவித்துள்ளார்கள் அத்துடன் தற்போது ள்ள உணவு விலையும் அங்குள்ள மக்களை மேலும் பட்டினி இட்டுச் செல்கின்றதாகவும் தெரிவித்துள்ள தொண்டு நிறுவனங்கள் எதியோப்பிய அரசின் கணிப்பை விட அங்கு பட்டிணியை எதிர்நோக்கியுள்ள மக்கள் தொகை அதிகமாக இருக்க கூடும் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளது.இவ் பட்டினி நிலைமை போசாக்கு இன்மை காணைமாக சிறியவர்கள் பெரியவர்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக அவர்களின் அவயவங்கள் மெலிந்து ஒட்டிய நிலையில் இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படகிறன்றது.

குறிப்பு: இயற்கையால் விளைந்த வினை இது ஆனால் செயற்கையாகவும் இவ்வாறான நிலைமைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டுள்ளன.இது நமது கண்ணின் முன்னே நடைபெற்றுக் கொண்டுள்ளது. சில விடயங்கள் மறைக்கப்பட்டு அதை அறியும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

எனவே இது போலவே உள்ள பல உலக சமூகங்கள் உதவிக்கு ஏங்கி நிற்கின்றன என்பதை புரியவேண்டும் உரியவர்கள் .உங்களில் நாங்கள் என சொல்லித் திரிபவர்கள்.

2 கருத்துகள்:

  1. தகவலுக்கு நன்றி.

    சில எழுத்துப்பிழைகள் உள்ளன. பட்டிணி தவறு, பட்டினி சரி.

    பதிலளிநீக்கு
  2. நன்றி
    தொடர்ந்து வழிப்படுத்ததுங்கள்

    பதிலளிநீக்கு