செவ்வாய், 13 அக்டோபர், 2009

மீண்டும் பறக்கும் தட்டா மொஸ்கோவில் அதிசயம்.


மொஸ்கோவின் வான் பரப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காண அரிய காட்சி ஒன்று தென்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அதன் இரகசியம் புலப்பட்டதாக தெரியவில்லை.மேல் உள்ள புகைப்படத்தை பார்த்தால் அது என்னவென்று ஓரளவுக்கு புரிந்து கொள்ளலாம்.இது முகிலா இல்லை வேறு பொருளா என்பதில் இன்றும் மர்மம் நீடிக்கின்றது.முதலில் இரு கணிணி வடிவமைப்பு என்று நம்பிய ரஷ்ய வாநிலை நிலையம் தற்போது இல்லை இது அவ்வாறான கணினி கிராப்பிக்சால் உருவாக்கப்படவில்லை என ஏற்றுக் கொண்டுள்ளது.ஆனால் அது என்ன என்பது இன்னும் பலப்படவில்லை என்றே தெரிவித்து வருகின்றது. வானத்தில் அவ்வாறு வளையமாக தோன்றியது அடையாளப்படுத்தப்படாத வெளியுலக பொருளா அல்லது முகிலா என்னும் சந்தேகங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.உலகின் மர்மங்கள் பல இன்னும் புலப்படாமல் உள்ள நிலையில் குறிப்பாக சோவியத் ரஷ்யாவின் மர்மங்கள் இன்னும் பலப்படாமல் உள்ள நிலையில் இன்னும் ஒரு மர்மம். ஏதொ வெளியுலகப் பொருள் எனில் இன்னும் புதினங்கள் வரும் வரும் போது தரக் காத்திருக்கின்றேன்.

சலனப் படத்தை பார்க்க சொடுகவும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக